கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது

ஜெனீவா:

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது:-


2 மெல்லக்கொல்லும் நோய்களை நாட்டில் இருந்து ஒழித்ததில் இந்தியா உலகுக்கே முன்னிலையாக விளங்கியது. பெரிய அம்மை நோயை ஒழித்து உலகுக்கு சிறந்த பரிசை வழங்கியது. போலியோவையும் இந்தியா ஒழித்துவிட்டது. எனவே இந்தியாவுக்கு வியக்கத்தக்க திறன் இருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பது குறித்து என்ன செய்ய வேண்டும் என்று உலகுக்கு காட்ட வேண்டும். இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்பதற்கு எளிதில் பதில் சொல்ல முடியாது. இதற்கு முன்பு செய்ததுபோல இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image